கருணை நிறைந்த கண்களை
எப்படி நான் காண்பேன்
குப்பையில் இருந்து உயர்த்திய
பேரன்பை மறந்து விட்டேன்
என் எதிரிகள் முன்பாக
நான் நல்லவன் ஆக
தூய்மையின் தலைவன் நீர்
துரோகி போல் நின்றீர் அல்லோ
தியாகத்தின் உச்சம் நீர்
அதன் விலையினை நான் மறந்தேன்
மீண்டும் மீண்டும் உம்மை
நான் தோல்வியுற செய்தேனையா
உம் நேசத்தை மறவாமல் நான்
இருக்க வேண்டுமையா
நான் உண்மையாய் நேசித்திருந்தால்
வீரமாய் நின்றிருப்பீன்
கல்லாய் நிற்கும் என்னை
உடைத்து உருக்குமே
உண்மை அன்பிற்கு என்னை
உருக்கமாய் அடிபணிவேன்
பெலவீன பாண்டம் என்னை
ஆவியில் நிறைத்திடுமே
வெற்றியின் கொடிகள் ஏந்தி
தொடர்ந்து நிமிர்ந்திடுவேன்
பாவமாம் என் தேகத்தை
பலியாய் படைக்கிறேன்
முற்றிலும் எரித்துவிட்டு
புதிதாய் மாற்றிடுமே
No comments:
Post a Comment